காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினரின் வாயை அடைக்கும் விதமாக, மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, கூடுதல் அம்சங்களுடன் வேறு பெயரில் புதிய திட்டமாக மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் என்ற பெயரில் காதி, கைத்தறி, கைவினைப் பொருட்கள் துறைக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கத்துடன் புதிய திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் மூலம், கதர், கைத்தறி, கைவினைப் பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் நெசவாளர்கள், கிராமத் தொழில் துறையினர் பயன்பெறுவர் என்றும் அவர் அறிவித்தார்.
















