விழுப்புரம் அருகே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில், தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிகர நிகழ்ச்சியாக, சாமியார் அருட்பெருஞ்சோதி மார்பு மீது உரல் வைத்து மாவு இடிக்கும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து, சாமியாருக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. கண்கள் மற்றும் உடல் முழுவதும் மிளகாய் கரைசல் ஊற்றப்பட்ட நிலையிலும், சாமியார் பக்திப் பரவசத்துடன் காட்சியளித்தது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, மூலவர் சன்னிதானத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித கலசத்தை ஏந்தியபடி, பூக்குண்டத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
















