மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன்கள் வழங்கவில்லை என கூறி காளைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழக்கரை கிராமத்தில் உள்ள ஏழு தழுவுதல் அரங்கில், தொகுதி வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் சோழவந்தான் தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளுடன் உரிமையாளர்கள் வந்தனர்.
எனினும் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாட்டின் உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
















