கடலூர் அருகே தீப்பெட்டி கேட்ட முதியவரை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சோனஞ்சாவடியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கடந்த 30ஆம் தேதி தலையில் கல்லால் தாக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த, சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், சங்கொலிகுப்பம் அருகே உள்ள பழைய கட்டடத்தில் பதுங்கி இருந்த சுதாகர், முகேஷ் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசாரிடம் இருந்த தப்பிக்க முயன்ற இருவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீப்பெட்டி கேட்டபோது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் பூமிநாதனை கல்லால் அடித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
















