"புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?" - அண்ணாமலை ஆவேசம்!
Mar 22, 2026, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?” – அண்ணாமலை ஆவேசம்!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவரது பதிவில் திமுக ஆட்சியில், கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருப்பது, தமிழகத்திற்கே தலைகுனிவு. புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்

கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், மிக, மிக அதிகரித்துள்ளன. சமீபத்தில், திருத்தணி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில், ஒரு வடநாட்டு இளைஞரை, இளம் சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளியை பார்த்தோம். அதன் பிறகாவது, இந்தச் சொரணையற்ற திமுக அரசு, கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் திமுகவில் பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது தவறுதான் என தெரிவித்தார்

அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பள்ளிகளில், தற்போது போதைப்பொருள் புழக்கமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. பிறகு எப்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்

16 வயது சிறுவனுக்குக் கூட கஞ்சா கிடைக்கும் இடம் தெரிந்திருக்கிறது. சென்னை மாநகரக் காவல்துறைக்கு இன்னும் தெரியவில்லை என்பது எட்டாவது உலக அதிசயம் என அண்ணாமலை விமர்த்தித்துள்ளார்

தமிழக பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். திமுக ஆட்சியில், நமது குழந்தைகள் எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையே நீங்கள் தான் காப்பாற்றியாக வேண்டும். இன்று அரசுப் பள்ளி வரை வந்துவிட்ட கஞ்சா புழக்கம், நம் வீடு வரை வர வெகுநாட்கள் ஆகாது. இந்தக் கையாலாகாத திமுக அரசையோ, அதன் ஏவலாளியாகவே மாறிவிட்ட தமிழக காவல்துறையையோ, இனியும் நம்பி பலனில்லை. குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை தயவுசெய்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வைத்திருங்கள் என கூறினார்

இந்த போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Tags: Schooltn bjpstudentsKANJAcannabisChennaitamilnaduannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

Next Post

உலக தரத்தில் தமிழக ரயில்வே! – தெற்கு ரயில்வே பொது மேலாளர்!

Related News

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies