டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படை குழுவினருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை முதன்மை செயலாளர் சத்யபிரத சாஹு பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தேசிய மாணவர் படையினருக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், டெல்லியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்வதாகவும் சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
















