உத்தரப்பிரதேசத்தில், கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள், அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் லோனி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், அதிகாலை 2 மணியளவில் பலத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
அங்கு 12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுமிகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்,
ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுமிகளின் அறையைச் சோதனையிட்ட போலீஸார், அங்கு ஒரு பக்க தற்கொலை கடிதத்தைக் கண்டெடுத்தனர். அதில் ஒரு அழுகை எமோஜியுடன் (Crying Emoji) எழுதப்பட்டிருந்தது.மேலும், அவர்களது அறையில் புகைப்படங்கள் சிதறிக் கிடந்தன.
மேலும், கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற 3 சகோதரிகளும் தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் செல்போனில் என்ன செய்கிறார்கள், எந்த மாதிரியான செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தத் துயர சம்பவம் உணர்த்துகிறது.
















