தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திமுக எம்.பி. கனிமொழி, வழக்கம் போல் , உண்மைகளை அறியாமல் இருக்கிறார் என்றும், அவரது சகோதரரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஊழல் நிறைந்த தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை என கூறியுளளார்
ரூ.35,701 கோடி மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் திமுக பிராந்திய அரசு துரிதப்படுத்தத் தவறிய காரணமாக அவற்றின் செயலாக்கம் தாமதமாகி வருவதாகவும் அவர் கூறியுளளார். .
இந்த ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில், திமுக பிராந்திய அரசு டிசம்பர் 2025 நிலவரப்படி, தேவையான நிலத்தில் 24% மட்டுமே கையகப்படுத்தியுள்ளது என்றும் . கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதற்காக நிலுவையில் உள்ள பல திட்டங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே நிலைதான் தமிழ்நாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊழல் நிறைந்த திமுக அரசால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட தடைகள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
நாள் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்குப் பதிலாக, கனிமொழி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை முடிப்பதற்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று தனது சகோதரரிடம் கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















