மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சபரிமலை ரயில் பாதை திட்டத்திற்கு ஐம்பது சதவீத நிதியை வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது.
சபரிமலை செல்வோருக்கு வசதியாக, கேரள மாநிலம், அங்கமாலி – எரிமேலி இடையே 110 கிலோ மீட்டருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம், நிலம் கையகப்படுத்தல், நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால், கடந்த 20 ஆண்டுகளாக தாமதமானது.
இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்த கேரள அரசு, திட்டச் செலவில் ஐம்பது சதவீதமான ஆயிரத்து 905 கோடி ரூபாயை தாங்களே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது.
















