சென்னை நொளம்பூரில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்ஸலியா என்பவர் மகன் நிக்கில் உடன் வசித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிக்கில், சென்னை திரும்பியதும் எந்த பணிக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், வேலைக்கு செல்லும்படி கூறியதால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மகன் வீட்டில் இருந்த கத்தியால் தாயைக் குத்தி கொலை செய்துவிட்டு, வீட்டின் படுக்கை அறையில் உறங்கி உள்ளார். நிக்கலின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர் கதவை தட்டியும் திறக்காமல் இருந்ததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஆக்ஸலியா ரத்து வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், வீட்டின் படுக்கைறையில் உறங்கிய நிக்கிலிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தாயை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, நிக்கிலை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















