தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 50 ஆண்டுகளாக வசித்து வந்த மக்களின் வீடுகளை அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பின்றி அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சின்ன மாட்லாம்பட்டி பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த இடங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க மறுப்பதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் குடியிருப்புக்குள் ஜேசிபி வாகனத்துடன் வந்த அதிகாரிகள் எந்தவித அறிவிப்புமின்றி மக்களை வெளியேற்றியதோடு வீடுகளை இடித்து அகற்றினர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
















