திருப்பூரில் உள்ள பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் புதிய உறுப்பினர்களின் இணைப்பு விழா நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
முன்னதாக காடேஸ்வரா சுப்பிரமணியத்திற்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
















