புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை ஒட்டி, கச்சத்தீவில் இலங்கை கடற்படை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் திருவிழா நடைபெற உள்ளது. இதில் இலங்கை மட்டுமின்றி தமிழகத்தின் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பங்கேற்பர்.
இதற்காக கச்சத்தீவில் இலங்கை கடற்படை சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் தங்களது படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்திவதற்காக தற்காலிக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
















