சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கள் கட்சி நிர்வாகியை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எச்சரித்துள்ளனர்.
மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் புதூர் பகுதியை சேர்ந்தவர் பாஜக கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் சங்கர். கடந்த வியாழனன்று ராமன் நகர் பகுதியில் பிரதமர் மோடி குறித்து அவதூறு போஸ்டர்களை ஒட்டிய திமுகவினரை சங்கர் தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக கவுன்சிலர் சோபனா உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சங்கரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சங்கர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஹரிராமன் தலைமையிலானோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிராமன், தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
















