தமிழகத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற மத்திய பட்ஜெட் வழிவகை செய்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள பலன்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர்கள் எடுத்துரைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ராசிபுரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையால் தமிழகத்திற்கு அனைத்து வழிகளிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என கூறினார்.
ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை என திமுகவினர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என கூறிய வி.பி.துரைசாமி, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம் எனவும் தெரிவித்தார்.
















