கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டிச.3 ஆம் தேதி குழு அமைத்தோம் என்றும், ஆனால் திமுக இன்னும் குழு அமைக்கவில்லை என்றார்.
திமுக எப்போது குழு அமைக்கிறதோ அப்போது பேச தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
“குரூப் 2, 2 ஏ தேர்வு ரத்து செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும், போட்டித் தேர்வுகளுக்காகத் தயார் செய்து இவ்வளவு நாள் காத்திருந்த மாணவர்களுடைய வாழ்க்கையும், அவர்களுடைய நம்பிக்கையும் உடைந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
















