பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள சம்பா நகரில் நடந்த உருக்கமான நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமணத்திற்குப் பிறகு தனது புகுந்த வீட்டிற்குச் செல்லும் சகோதரியின் விடைபெறும் நிகழ்வின்போது, அவருடன் செல்ல காரில் இடம் கிடைக்காததால், அவரது தம்பி சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இணையதளவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு தம்பி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், இதுதான் உண்மையான உடன்பிறப்பு பாசம் எனவும் பலர் பாராட்டி வருகின்றனர்.
















