சேலம் அருகே கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சன்னியாசி குண்டு பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கஞ்சா போதையில் இருந்த 20 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மற்றொரு தரப்பினரை தாக்கியுள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த அந்த கும்பல், அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. இதில் மணிமாறன், கதிரவன், விஜி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதனிடையே மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
















