திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் தலைமையை குழப்புவதோடு தவறாக வழிநடத்துவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வியூகப் பணிகளுக்காக சில நிறுவனங்களை திமுக தேர்வு செய்தது. அதன்படி பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர்க், பென் போன்ற நிறுவனங்கள் இந்த பணிகளை மேற்கொண்டன.
இதில் பென் நிறுவன ஊழியர் ஒருவர் அதிக வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வியூக நிறுவனங்கள் மீது திமுகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதில் சர்வே பணிகளை மட்டுமே செய்து வந்த பென் நிறுவனம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நிலையில் வாக்குச்சாவடி அமைப்பது உறுப்பினர்களை தேர்வு செய்வதை ஐபேக் நிறுவனம் கையில் எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே உதயநிதியை சுனில் கனுகோல் என்ற நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறிய திமுகவினர், வசூல் வேட்டைக்காக வியூக நிறுவனங்கள் போட்டு போடுவதால் பணிகள் எதுவும் சிறப்பாக நடைபெறவில்லை எனவும் குழப்பம் மட்டுமே நீடிப்பதாகவும் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
















