திருவாரூர் மற்றும் நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து அரசுப்பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியில் அரசுப்பள்ளிகளில் சுகாதாரமோ, அடிப்படை கட்டமைப்போ இல்லாத நிலை நீடிப்பதாக தெரிவித்துள்ளார்
அரசுப்பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மேற்கூரை இடிந்து விழுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சத்துடனே பள்ளிக்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசு கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என போலியாக விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, குரூப் -2 போன்ற முக்கிய தேர்வுகளைக்கூட முறையாக நடத்த தெரியாதவர் தமிழகத்திற்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடான ஒன்று எனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
















