கொரோனோ கால ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றாத 72 பேருக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநருக்கு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
















