சங்கரன்கோவில் அருகே 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமாள்பட்டி ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.
இந்த மையத்திற்கு அருகே மழைநீர் குளம் போல் தேங்குவதாலும், உயர் மின்னழுத்த கம்பி செல்வதாலும் பாதுகாப்பு கருதி 3 ஆண்டுகளாக அங்கன்வாடி செயல்படாமல் உள்ளது.
இந்நிலையில், உயர் மின்னழுத்த வழித்தடத்தை மாற்றி அமைத்து, மழைநீர் தேங்கும் பகுதியை சீரமைத்து அங்கன்வாடி மையத்தை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















