அமைச்சர் காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படும் நிலையில் திமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைத்தறி துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிலையில், அமைச்சர் காந்தி பங்கேற்கவில்லை.
இதனால் அதிருப்திக்குள்ளான ஸ்டாலின், மற்றொரு நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தியிடம் கடிந்துகொண்டார்.
இந்த சம்பவம் திமுகவுக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்,ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சரை வரவேற்பதற்காக அமைச்சர் காந்தி தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார்.
இதனையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், விழா நடைபெறும் இடத்திற்கு மாற்றுப்பாதையை பயன்படுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றமடைந்த அமைச்சர் காந்தி, விழா நடைபெறும் இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கும் இவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் முகம் கொடுத்து பேசவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அமைச்சர் காந்தியை முதலமைச்சர் புறக்கணித்து வருவது, திமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
















