தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், நீர்நிலைகளின் சாதியப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் குறைபாடு உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரி பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள், அதே நேரம் அரசாணை அடிப்படையில் 45 நாட்களில் சாலைகள், தெருக்களின் பெயரை மாற்றுவது நடைமுறையில் சாத்தியமானதல்ல என தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















