அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி முக்கடல் சுற்றுலா தலம் முழுவதும், ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு குமரி கடற்கரை பகுதிகளில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் ஆக்கிரமிப்பு கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பகவதி அம்மன் கோயில் சன்னதி தெருவில் ஆக்கிரமிப்பில் உள்ள 12 கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் 12 கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்புறப்படுத்தப்படும் கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகள் ஒதுக்கித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
















