நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் சில நாட்களுக்குமுன் ஊர் மக்கள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு முன்னெடுத்த 605 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக்குடிநீர் வழங்கும் திட்டத்தில் கூடங்குளம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து இத்திட்டத்தில் கூடங்குளத்தை சேர்க்க வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
















