கோவையில் ஆன்லைன் அபராதம் செல்லாது, தங்களது இயந்திரத்தில்தான் செலுத்த வேண்டுமென அடாவடி செய்த போக்குவரத்து காவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.
கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையின்போது தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஓட்டுநர் ஒருவர் ஏற்றி வந்தார்.
அப்போது சரக்கு ஆட்டோவை வழிமறித்த போலீசார், விதி மீறலுக்காக அபராதம் விதித்துள்ளனர்.
அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்துவதாக ஓட்டுநர் கூறியபோது, ஆன்லைனில் அபராதம் செலுத்துவது செல்லாது, தங்களது இயந்திரத்தில்தான் அபராதம் கட்ட வேண்டும் என போக்குவரத்து காவலர் அடாவடியில் ஈடுபட்டது, இணையத்தில் வெளியாகி உள்ளது.
















