எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் - முப்பரிமாணவ மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்
Feb 12, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாணவ மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

Manikandan by Manikandan
Feb 12, 2026, 09:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒடிசா மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 415 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக அமைக்கப்படும் புவனேஷ்வர் ரயில் நிலையம் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஒடிஷா மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சியை வீழ்த்தி பாஜக தனது ஆட்சியை அமைத்தது. முதல்வராக மோகன் சரண் மாஜி பொறுப்பேற்ற பின் மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரத்தை டில்லி, மும்பை சென்னை போல் வளர்ந்த நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் மத்திய அரசு, தினசரி லட்சக்கணக்கான ரயில் பயணிகள் வந்து செல்லும் புவனேஸ்வர் ரயில் நிலையத்தை 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரயில்நிலையமாக மட்டுமில்லாமல், பேருந்து முனையம், பிரம்மாண்ட வணிக வளாகங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் இந்த மல்டி மாடல் மையம் நடப்பாண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

ரயில் நிலையத்தை விமான நிலைய தரத்திற்கு உயர்த்த ஆறு நடைமேடைகளையும் இணைக்கும் 108 மீட்டர் நீளமுள்ள ஏர்-கான்கோர்ஸ் அமைக்கப்படுகிறது. 34 மின்தூக்கிகள், 20 நகரும் படிக்கட்டுகள், ஓய்வறைகள், உணவு வளாகங்கள் மற்றும் நவீன கியோஸ்க்குகள் இடம் பெறுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 11 மாடி மேற்குத் தொகுதி மற்றும் 3 மாடி கிழக்குத் தொகுதி கட்டடங்கள், பசுமை நிலப்பரப்பு, EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் இருப்பதால் புவனேஷ்வர் நிலையம் ஒடிசாவின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடநெருக்கடி மிகுந்த பகுதியில் முப்பரிமாண மாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகத்துல்லியமாக இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. புவனேஸ்வரில் ஒரே கூரையின் கீழ் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இணைக்கப்படுவது முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவின் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் வாயிலாக பயணிகள் ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு மாறுவதற்கான பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. பாஜக ஆட்சி அமைந்த பின்பு அங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த மல்டி மாடல் மையம் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒடிஷாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

 

Tags: bjpodisharailway stationsNaveen PatnaikODISHA railway stationsOdisha assemply
ShareTweetSendShare
Previous Post

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

Related News

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை…இந்தியா – அமெரிக்கா டீல் சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை

முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டும் மோனலிசா!

கேரளாவிலும் திராவிட மாடல் என அண்ணாமலை கடும் விமர்சனம்

நிலக்கரி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை – தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாணவ மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

ப்ரொமோஷனில் பங்கேற்காத பிஜு மேனன் மீது வழக்கு தொடர முடிவு!

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – திமுகவுக்கு கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன்

காங். பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரிடம் ஆன்லைனில் மனு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

2000 கி.மீ. தூரம் நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்த பக்தர்கள்

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies