எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் - முப்பரிமாண மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்
Apr 16, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாண மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

Manikandan by Manikandan
Feb 12, 2026, 09:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒடிசா மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 415 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக அமைக்கப்படும் புவனேஷ்வர் ரயில் நிலையம் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஒடிஷா மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சியை வீழ்த்தி பாஜக தனது ஆட்சியை அமைத்தது. முதல்வராக மோகன் சரண் மாஜி பொறுப்பேற்ற பின் மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரத்தை டில்லி, மும்பை சென்னை போல் வளர்ந்த நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் மத்திய அரசு, தினசரி லட்சக்கணக்கான ரயில் பயணிகள் வந்து செல்லும் புவனேஸ்வர் ரயில் நிலையத்தை 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரயில்நிலையமாக மட்டுமில்லாமல், பேருந்து முனையம், பிரம்மாண்ட வணிக வளாகங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் இந்த மல்டி மாடல் மையம் நடப்பாண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

ரயில் நிலையத்தை விமான நிலைய தரத்திற்கு உயர்த்த ஆறு நடைமேடைகளையும் இணைக்கும் 108 மீட்டர் நீளமுள்ள ஏர்-கான்கோர்ஸ் அமைக்கப்படுகிறது. 34 மின்தூக்கிகள், 20 நகரும் படிக்கட்டுகள், ஓய்வறைகள், உணவு வளாகங்கள் மற்றும் நவீன கியோஸ்க்குகள் இடம் பெறுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 11 மாடி மேற்குத் தொகுதி மற்றும் 3 மாடி கிழக்குத் தொகுதி கட்டடங்கள், பசுமை நிலப்பரப்பு, EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் இருப்பதால் புவனேஷ்வர் நிலையம் ஒடிசாவின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடநெருக்கடி மிகுந்த பகுதியில் முப்பரிமாண மாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகத்துல்லியமாக இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. புவனேஸ்வரில் ஒரே கூரையின் கீழ் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இணைக்கப்படுவது முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவின் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் வாயிலாக பயணிகள் ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு மாறுவதற்கான பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. பாஜக ஆட்சி அமைந்த பின்பு அங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த மல்டி மாடல் மையம் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒடிஷாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

 

Tags: bjpodisharailway stationsNaveen PatnaikODISHA railway stationsOdisha assemply
ShareTweetSendShare
Previous Post

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

Next Post

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை!

Related News

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies