கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர், ஈஷாவில் 32வது மகா சிவராத்திரி விழா வரும் 15ஆம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளதாக கூறினர்.
இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோயில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
















