தோல்வி பயம் காரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கடந்த காலங்களில் குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படவில்லையா? என்றும் தற்போதுமட்டும் ரூ.5,000 வழங்கும் நோக்கமென்ன? என கேள்வி எழுப்பினார்.
பெண்களின் வாக்குகளை பெற வேண்டும் என திட்டமிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், பல பெண்களுக்கு கடந்த 5 மாதங்களாக மட்டுமே உரிமை தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சாடினார்.
55 மாதங்களாக உரிமைத் தொகை பெறாமல் இருந்த பெண்கள் பாதிக்கப்படவில்லை என்றும், மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இபிஎஸ் கூறினார்.
















