தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் - சி.வி.சண்முகம்
Feb 14, 2026, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 07:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக அறிவிப்பால் திமுக கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் முடிந்தபின் திமுகவினர் மக்களை மறந்து விடுவதாக விமர்சித்தார்.

மகளிருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதாக அதிமுக அறிவித்ததால் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 2021ஆம் ஆண்டு வழங்க வேண்டிய மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு 2026-ல் வழங்குவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதேபோல் கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென போலீசார் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லிலும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தோல்வி பயத்தால் திமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாக விமர்சித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு உண்டா, இல்லையா என்று பட்டிமன்றம் நடப்பதாக விமர்சித்தார். மேலும் அதிமுக கூட்டணி வளர்பிறை என்றும், திமுக கூட்டணி தேய்பிறை எனவும் அவர் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, வாலாஜாபேட்டை, அறந்தாங்கி, நெல்லை மானூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், 125 நாள் வேலைத் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக கூறி கண்டன முழக்கமிட்டனர்.

Tags: former minister C.V. Shanmugamcv shanmugam speechmagalir speechDMKvillupuramVallam
ShareTweetSendShare
Previous Post

குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுடன் முதல்வர் சந்திப்பு – உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்!

Related News

இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் பலி!

திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்!

அடுத்தவர் குதிரையில் சவாரி செய்கிறார் தவெக தலைவர் விஜய் – அதிமுக விமர்சனம்!

2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுடன் முதல்வர் சந்திப்பு – உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்!

குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் – பிரதமர் மோடி

வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!

காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!

கரூர் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் விஜய் கூட்டத்தில் அடுத்த மரணம்!

சேவா தீர்த்தம் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies