தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் - சி.வி.சண்முகம்
Jul 20, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 07:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக அறிவிப்பால் திமுக கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் முடிந்தபின் திமுகவினர் மக்களை மறந்து விடுவதாக விமர்சித்தார்.

மகளிருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதாக அதிமுக அறிவித்ததால் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 2021ஆம் ஆண்டு வழங்க வேண்டிய மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு 2026-ல் வழங்குவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதேபோல் கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென போலீசார் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லிலும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தோல்வி பயத்தால் திமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாக விமர்சித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு உண்டா, இல்லையா என்று பட்டிமன்றம் நடப்பதாக விமர்சித்தார். மேலும் அதிமுக கூட்டணி வளர்பிறை என்றும், திமுக கூட்டணி தேய்பிறை எனவும் அவர் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, வாலாஜாபேட்டை, அறந்தாங்கி, நெல்லை மானூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், 125 நாள் வேலைத் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக கூறி கண்டன முழக்கமிட்டனர்.

Tags: magalir speechDMKvillupuramVallamformer minister C.V. Shanmugamcv shanmugam speech
ShareTweetSendShare
Previous Post

குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுடன் முதல்வர் சந்திப்பு – உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்!

Related News

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies