மடகாஸ்கரில் Gezani புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 9ம் தேதி சூறாவளி உருவானது. இப்புயல் துவாமசினா நகரை மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
18,000 வீடுகள் முழுமையாக இடிந்ததாகவும், சுமார் 50,000 வீடுகள் சேதத்தை சந்தித்தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், துவாமசினா நகரின் 75 சதவீத உட்கட்டமைப்புகள் உருக்குலைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
தலைநகர் அண்டனானரிவோவில் அதிகனமழை கொட்டி தீர்த்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாதிப்புகளை சரி செய்ய சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என, மடகாஸ்கர் அதிபர் மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michael Randrianirina) கோரிக்கை விடுக்கும் அளவுக்கு பாதிப்பின் தீவிரம் இருந்தது.
இந்நிலையில், Gezani புயலால் இதுவரை 40 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 430 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாயமான 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















