திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் நோயாளியை ஏற்ற வந்த ஆம்புலன்ஸில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் நோயாளியை ஏற்ற வந்த ஆம்புலன்ஸின் உள்ளே இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து நேரிட்டது.
நோயாளி ஒருவரை, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஏற்றிச்செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
அப்போது ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் தீ பற்றியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
















