சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தூய்மை பணியாளர்களிடம் இருந்து விசிலை பறித்து தூக்கி எறிந்த திமுக கவுன்சிலரை கண்டித்து தவெகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கவுன்சிலர் அயூப்கான், தூய்மை பணியாளர்கள் வைத்திருந்த விசிலை பிடுங்கி, அதற்கு பதிலாக மினி மைக்செட்டை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக தவெகவினர், தூய்மை பணியாளர்களுக்கு விசில் மற்றும் காலை உணவு வழங்கினர்.
















