டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பிரிவின் தலைமை காவலர் குமார் என்பவர், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அங்கு பணியாற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழகக் காவலர்கள் போதிய ஓய்வின்றி, கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக அவரது மனைவி சாந்தா தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த டெல்லி காவல்துறை கமெண்டன்ட், தம்பதியினரை மிரட்டித் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் தமிழக காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தங்களை மிரட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவலர் குமார் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
















