கூட்டணியில் நீடிக்க வேண்டுமெனில் மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டுமென டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் தொடர்நது குரல் எழுப்பி வருகின்றனர்.
எனினும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதனால் காங்கிரஸ் – திமுக இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை, திமுக தலைமையகம் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,
அதில் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுத்து, அவர் இனி இப்படி பேச முடியாத அளவுக்கு கடிவாளம் போடுங்கள் எனவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரசுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்ற முடிவை எடுப்போம் எனவும் திமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையடுத்து அவசர அவரசமாக பெங்களூரு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு. கட்சியின் தேசிய தலைவர் கார்கேவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அச்சமில்லை, அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
















