திமுக ஆட்சி அமைந்தால், ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான கருத்தை கூறி ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது வேடிக்கையாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைத்ததற்கு தேர்தல் பயமே காரணம் எனவும் அவர் விமர்சித்தார்.
இதற்குப் பதலளித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்புத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், கோடைகாலம் வர உள்ளதால், வெயில் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுக்கு இந்த நிதி உதவும் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
















