கோவையில், இடப்பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
வேலாயுதபுரத்தில் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் பள்ளிவாசல் உள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள இடத்திற்கு உரிமை கோரி இஸ்லாமியர்கள் சிலர் பிரச்னை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
மேலும், அங்குள்ள அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை அடைத்ததுடன், நாகர் சிலை ஒன்றையும் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜகவினர் அங்கு சென்று போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதுடன், இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில், எடுத்துச் செல்லப்பட்ட நாகர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டுமென இந்து முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
















