உலகளாவிய ஏஐ மற்றும் செமிகண்டக்டர் விநியோகம் தொடர்புடைய பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், உள்ளிட்டோர் முன்னிலையில் பாக்ஸ் சிலிக்கா பிரகடனத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஏ.ஐ., செமிகண்டக்டர் மற்றும் முக்கிய தாதுக்களின் விநியோகத்தை பாதுகாக்கவும், தொழில்நுட்பத்தில் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கும் முயற்சியாகவும் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
















