உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரேசில் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா- பிரேசில் இடையிலான உறவில் பாதுகாப்பு, ஆரோக்கியம் சார்ந்த பிரிவுகளில் புதிய புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தரமான மற்றும் மலிவு விலை மருந்துகளைப் பிரேசிலுக்கு விநியோகம் செய்வதை அதிகரிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும் எனவும் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
















