தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, சிறுபான்மையின மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது.
மத்திய அரசு சிறுபான்மையின மக்களுக்காகச் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும்,
வரும் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பாஜகவிற்குச் சாதகமாக மாற்றும் வியூகங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
சிறுபான்மையினர் அணியின் மாநிலத் தலைவர் ஜான்சன் சாமுவேல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையின மக்கள், பெண்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
















