தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் சென்னைக்கு வருகை தந்தனர்.
அவர்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்றார். பின்னர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, தேர்தல் ஆணைய குழுவினர் புதுச்சேரிக்கு சென்றனர்.
தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் முகாமிட்டு, தேர்தல் பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
















