அதிமுக சார்பில் வெற்றிப்பெற்று 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீசெல்வம் திமுகவில் ஐக்கியமானார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற அவர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
அப்போது திமுக உறுப்பினர் படிவத்தில் ஓபிஎஸ் கையெழுத்திட்டார். முன்னாள் எம்.பியும், ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.
இதனிடையே திமுகவில் இணைந்ததை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரிடம் அவர் வழங்கினார். இதேபோன்று ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பனும், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
















