பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலில் எஸ்பிஜி படையினர் ஆய்வு நடத்தினர்.
மண்டேலா நகரில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மார்ச்1ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
மதுரை விமான நிலையம் வர இருக்கும் பிரதமர் அங்கு நடைபெற உள்ள அரசுவிழாவில் பங்கேற்றபின் திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இவரது வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோயிலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















