கோவை மாவட்டம் நீலம்பூரில் திமுக கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
நீலம்பூர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தால் அவினாசி சாலை மற்றும் பைபாஸ் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், சிகிச்சைக்காக நோயாளிகளுடன் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பதற்றம் நிலவியது.
முறையான முன்னேற்பாடுகள் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே, மாநாடு முடிந்து முதலமைச்சர் புறப்பட்டு சென்றபின், அங்கிருந்த அலங்காரப் பொருட்களை திமுக தொண்டர்கள் எடுத்துச்சென்ற சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிச் சென்ற சில நிமிடங்களில், மேடை மற்றும் மாநாடு அரங்கின் முகப்பில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகள் உள்ளிட்டவற்றை அக்கட்சியின் தொண்டர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனர்.
















