காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!
Mar 15, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் காவலருக்கும் திமுக மாவட்ட துணைச் செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அருண் சிங் என்பவர், அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, திருட்டு வழக்கில் தொடர்புடைய ‘அப்பு’ என்ற நபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்புவை காவலர்கள் அருகிலுள்ள புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ந. துரை, திருட்டு வழக்கில் தொடர்புடைய அப்புவை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியே இழுத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தடுக்க முயன்ற காவலர் அருண் சிங், மாவட்ட துணைச் செயலாளர் தள்ளிவிட்டதாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு திரண்ட 40-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அப்புவை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளியை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த காவலர்களை திமுக நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படும் இந்த சம்பவம், ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: tn policefightdmk supporters fightராயப்பேட்டைChennaipoliceDMKRayapetta
ShareTweetSendShare
Previous Post

மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி – நிர்வாக கோளாறால் பங்கேற்க முடியாமல் திரும்பி சென்ற தேனி வீரர்கள்!

Next Post

மயானத்திற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies