தமிழகம், புதுச்சேரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
மதுரையில் என்டிஏ கூட்டணி மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதேபோன்று புதுச்சேரியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கி உள்ளார்.
இதில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, இரவு தங்குவதற்காக ண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். ஆளுநர் மாளிகையிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை புதுச்சேரிக்கு தனி விமானம் மூலம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர் புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை செல்லும் பிரதமர், அங்கிருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார். மதுரையில் முருக பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, தொடர்ந்து மதுரையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார்.
















