இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா ஈரான் மீது இருமுனை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இஸ்ரேல், ஈரான் இடையேயான பனிப்போர், எப்போது முடியும் என்று காத்திருந்த உலக நாடுகளுக்கு பேரிடியாய், ஈரானுக்கு எதிராக போரை அறிவித்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. “ஆப்ரேஷன் ரோரிங் லயன்” என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல், நூற்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதற்கிடையே, இஸ்ரேல் நடத்தும் போரில் தானும் அங்கம் வகிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அது உலக நாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதாலும், தற்காப்புக்காக இந்த தாக்குதலில் தான் இணைந்துள்ளதாக டிரம்ப் விளக்கம் அளித்தார்.
















